செய்திகள்
கோப்புபடம்

நெய்வேலி அருகே தனியார் நிறுவன அதிகாரி மீது தாக்குதல் - 2 பேர் கைது

Published On 2020-10-11 18:56 IST   |   Update On 2020-10-11 18:56:00 IST
நெய்வேலி அருகே தனியார் நிறுவன அதிகாரி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலி:

நெய்வேலி அருகே உள்ள கொல்லிருப்பு கிராமத்தில் என்.எல்.சி. நிறுவனத்தின் சார்பில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தனியார் நிறுவனத்தை சேர்ந்தவரும், நெய்வேலி 29-வது வட்டத்தில் உள்ள என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வருபவருமான கோபால்(வயது 28) என்பவர் சூப்பர்வைசராக உள்ளார். இவர் நேற்று பணிக்கு சென்றபோது கொல்லிருப்பு காலனி அம்பேத்கர் நகரை சேர்ந்த பழனி மகன் பாலாஜி என்கிற விஜயராஜ்(25), விஜய், அறிவழகன்(30), செக்கான் என்கிற பழனி, பலாக்கொட்டை என்கிற குணசேகர், அய்யப்பன், ராஜ்கபூர் ஆகியோர் வழிமறித்து ஏற்கனவே அந்த நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களுக்கு வேலை கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

மேலும் கோபாலை அவர்கள் தாக்கினர். இதில் காயமடைந்த கோபால், கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜி, அறிவழகன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Similar News