செய்திகள்
கோப்பு படம்.

பாகூர் அருகே பாம்பு கடித்து விவசாயி பலி

Published On 2020-10-11 11:14 GMT   |   Update On 2020-10-11 11:14 GMT
பாகூர் அருகே விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயியை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
பாகூர்:

பாகூரை அடுத்த குருவிநத்தம் பெரியார் நகரை சேர்ந்தவர் துரைசாமி (வயது 74). இவர், முன்னாள் எம்.பி. ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வேலை பார்த்து வந்தார். 

சம்பவத்தன்று வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது துரைசாமியை பாம்பு கடித்தது. இதனால் வாயில் நுரை தள்ளியபடி அவர் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி துரைசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பாகூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News