செய்திகள்
கைது

ஈரோட்டில் மது விற்ற 3 பேர் கைது

Published On 2020-10-09 16:10 IST   |   Update On 2020-10-09 16:10:00 IST
ஈரோட்டில் மது விற்ற 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:

ஈரோடு தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்சாமி மற்றும் போலீசார் வாய்க்கால்மேடு பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், ஈரோடு ரங்கம்பாளையம் இரணியன் வீதியை சேர்ந்த பாலுசாமி (வயது 33) என்பதும், அவர் அந்த பகுதியில் நின்று கொண்டு மது விற்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலுசாமியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 12 மதுபான பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் ஈரோடு சென்னிமலை ரோடு பகுதியில் நின்று கொண்டு மது விற்ற, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியை சேர்ந்த சேகர் (45) என்பவரை சூரம்பட்டி போலீசாரும், ஈரோடு பவானி ரோடு பகுதியில் நின்று கொண்டு மது விற்ற, வீரப்பன்சத்திரம் முல்லை நகர் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (26) என்பவரை கருங்கல்பாளையம் போலீசாரும் நேற்று கைது செய்தனர். இதில் சேகரிடம் இருந்து 7 மதுபான பாட்டில்களும், தினேஷ்குமாரிடம் இருந்து 5 மதுபான பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Similar News