செய்திகள்
தற்கொலை

ஈரோடு அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2020-10-09 13:12 IST   |   Update On 2020-10-09 13:12:00 IST
ஈரோடு அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு சூரம்பட்டி ஸ்டாலின் வீதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ஈஸ்வரி. சொத்து தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த ரமேஷ் தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்து விட்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ரமேஷ் நேற்று இறந்தார். இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News