செய்திகள்
6 மாதங்களில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 32 ஆயிரம் வழக்குகள்
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 32 ஆயிரத்து 286 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவை மீறி வெளியில் சுற்றி திரிந்தவர்கள் மீதும், ஊர்வலம், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தியவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 32 ஆயிரத்து 286 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.