செய்திகள்
அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட அங்கன்வாடி ஊழியர்கள்

நிலுவை சம்பளம் வழங்க கோரி அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட அங்கன்வாடி ஊழியர்கள்

Published On 2020-10-07 07:20 GMT   |   Update On 2020-10-07 07:20 GMT
நிலுவை சம்பளம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சர் வீட்டை அங்கன்வாடி ஊழியர்கள் முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:

புதுவை அரசின் சமூக நலத்துறையின் கீழ் உள்ள அங்கன்வாடியில் 450-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த 5 மாதங்களாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், நிலுவை சம்பளம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால், அரசு அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை. இதனால், 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேத்தாஜி நகரில் உள்ள சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமியின் வீட்டை முற்றுகையிட்டனர். வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என தெரிவித்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தர்ணாவில் ஈடுபட்டு வந்தனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின் போது கடுமையான வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கந்தசாமி உறுதி அளித்ததை தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News