செய்திகள்
கடைகளுக்கு சீல்

சமூக இடைவெளி கடைபிடிக்காத 2 கடைகளுக்கு சீல்

Published On 2020-10-06 08:18 GMT   |   Update On 2020-10-06 08:18 GMT
புதுச்சேரியில் சமூக இடைவெளி கடைபிடிக்காத 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
புதுச்சேரி:

புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. வணிக நிறுவனங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அரசின் விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்றால் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இந்த நிலையில் புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் உத்தரவின்பேரில் புதுவை தாசில்தார் ராஜேஷ்கண்ணா மற்றும் அதிகாரிகள் நேற்று காமராஜர் சாலையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பாலாஜி திரையரங்கம் எதிரில் உள்ள 2 பழச்சாறு கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்களுக்கு பழச்சாறுகள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த 2 கடைகளுக்கும் சீல் வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News