செய்திகள்
கே.வி.குப்பம் அருகே தண்ணீர் என நினைத்து அமிலம் குடித்த தொழிலாளி உயிரிழப்பு
கே.வி.குப்பம் அருகே காரில் இருந்த அமிலத்தை தண்ணீர் என நினைத்து குடித்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கே.வி.குப்பம்:
கே.வி.குப்பம் அருகே சென்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் நாகரத்தினம் (வயது 56), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு காரில் இருந்த அமிலத்தை தண்ணீர் என்று நினைத்து தவறுதலாக குடித்தார். எரிச்சலால் துடித்த அவரை கே.வி.குப்பம் அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பயனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கே.வி.குப்பம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.