செய்திகள்
கோப்புபடம்

நாகை மாவட்ட கல்வி அலுவலக பெண் உதவியாளர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-10-04 12:23 IST   |   Update On 2020-10-04 12:23:00 IST
நாகை மாவட்ட கல்வி அலுவலக பெண் உதவியாளர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:

நாகை வெளிப்பாளையம் வீதிகுளத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ஜான்சிராணி (வயது 55). இவர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவரது மகன், மகள் ஆகியோர் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் ராஜேந்திரன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்தநிலையில் ஜான்சிராணி மட்டும் வீட்டில் தனிமையில் வசித்து வந்தார்.

நேற்று இரவு நீண்ட நேரமாகியும் வீட்டின் மின்விளக்கு எரியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜான்சிராணி வீட்டின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது புடவையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு ஜான்சிராணி தொங்கி கொண்டிருந்தார். இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News