செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் மீது வழக்கு
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வடகாடு:
வடகாடு அருகே உள்ள புள்ளான்விடுதி, ஆவனம் கைகாட்டி பகுதிகளில் வடகாடு போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதாக புள்ளான்விடுதியை சேர்ந்த சரவணன் (வயது 37) மற்றும் ஆவனம் கைகாட்டியை சேர்ந்த செந்தில்குமார் (20) ஆகிய 2 பேர் மீது வடகாடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.