செய்திகள்
மது விற்ற பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடையார்பாளையம்:
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மணகெதி கிராமத்தை சேர்ந்த துரைசாமி(வயது 45), தத்தனூர்குடிகாடு கிராமத்தை சேர்ந்த வளர்மதி(40), அதே ஊரை சேர்ந்த உலகநாதன்(44), தத்தனூர் பொட்டக்கொல்லை கிராமத்தை சேர்ந்த அன்பழகன்(53), தத்தனூர் கீழவெளியை சேர்ந்த சுப்பிரமணியன்(61) ஆகிய 5 பேரும் அப்பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து 5 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.