செய்திகள்
தற்கொலை

தா.பழூர் அருகே விஷம் குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை

Published On 2020-10-01 14:30 GMT   |   Update On 2020-10-01 14:30 GMT
தா.பழூர் அருகே நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்த கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி காலனி தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 50). கூலித்தொழிலாளியான இவருக்கு அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. 

கடந்த 26-ந் தேதி வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலன் இல்லாமல் இறந்து விட்டார். 

இது குறித்து அவரது மகன் சரவணகுமார் கொடுத்த புகாரின் பேரில் தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Tags:    

Similar News