செய்திகள்
கொள்ளை

ஊரப்பாக்கத்தில் சாப்ட்வேர் நிறுவன மேலாளர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை

Published On 2020-10-01 10:50 GMT   |   Update On 2020-10-01 10:50 GMT
ஊரப்பாக்கத்தில் சாப்ட்வேர் நிறுவன மேலாளர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அய்யஞ்சேரி மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 36), இவர் சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் சென்னை கொடுங்கையூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 35 பவுன் தங்கநகை மற்றும் ரூ.15 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து லோகநாதன் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News