செய்திகள்
மாத்தூர் அருகே கார் மோதி வியாபாரி பலி
மாத்தூர் அருகே கார் மோதி வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவூர்:
மாத்தூர் அருகே உள்ள குண்டூர் பகுதியை சேர்ந்தவர் ஷியாம் சுந்தர் (வயது 44). இவர் வெளிநாடுகளுக்கு சென்று அங்கு உள்ள பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வந்தார். நேற்றுமுன்தினம் மதியம் ஷியாம் சுந்தர் சொந்த வேலையாக தனது மோட்டார் சைக்கிளில் மாத்தூருக்கு வந்தார். பின்னர் வேலையை முடித்துக்கொண்டு அதே மோட்டார் சைக்கிளில் குண்டூருக்கு சென்று கொண்டிருந்தார். புதுக்கோட்டை-திருச்சி சாலையில் மாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது, மண்டையூரைச் சேர்ந்த பூபதி (55) என்பவர் ஓட்டி வந்த கார் ஷியாம் சுந்தர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஷியாம் சுந்தரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.