செய்திகள்
கைது

விக்கிரமங்கலம் அருகே மது விற்ற பெண் கைது

Published On 2020-09-29 07:54 GMT   |   Update On 2020-09-29 07:54 GMT
விக்கிரமங்கலம் அருகே மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் விக்கிரமங்கலம் மெயின் ரோடு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி விக்கிரமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்த மாதவி(வயது 36) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவருடைய வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மது விற்பனை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதவியை கைது செய்தனர்.
Tags:    

Similar News