செய்திகள்
அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. அருண்மொழிதேவன்

கடலூர் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.க்கு கொரோனா

Published On 2020-09-28 06:42 GMT   |   Update On 2020-09-28 06:42 GMT
கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. அருண்மொழிதேவனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திட்டக்குடி:

கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அருண்மொழிதேவன்(வயது 52). கடலூர் நாடாளுமன்ற முன்னாள் எம்.பி.யான இவர், திட்டக்குடி வசதிஷ்டபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல், கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி தொல்லையால் முன்னாள் எம்.பி. அருண்மொழிதேவன் அவதிப்பட்டார். இதையடுத்து சுகாதாரத்துறையினர் நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இந்த பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் முன்னாள் எம்.பி. அருண்மொழிதேவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அவரது வீடு முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
Tags:    

Similar News