செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா

Published On 2020-09-28 00:19 GMT   |   Update On 2020-09-28 00:19 GMT
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 28 ஆயிரத்து 539 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 15 ஆயிரத்து 187 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 6 ஆயிரத்து 673 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.

13 ஆயிரத்து 811 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு முகாமில் 21 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வீடுகளில் 71 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் 21 வயது நபர், அல்லம்பட்டியை சேர்ந்த 23 வயது நபர், கொல்லர் சந்தையை சேர்ந்த 58 வயது நபர், ரோசல்பட்டியை சேர்ந்த 51 வயது நபர், ஆமத்தூரை சேர்ந்த 23 வயது நபர், எல்.ஐ.சி. காலனியை சேர்ந்த 29 வயது நபர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பந்தல்குடி, சேதுபுரம், லட்சுமியாபுரம், இலுப்பைகுளம், ராஜகோபாலபுரம், முத்துலிங்கபுரம், சண்முக நாதபுரம், ஏழாயிரம் பண்ணை, ராஜபாளையம் திருவள்ளுவர் நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் உள்பட 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,237 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 1,711 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. எனினும் 6 ஆயிரத்து 673 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.

மருத்துவ பரிசோதனைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதால் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளதா என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

எனவே உண்மை நிலவரம் அறிய மருத்துவ பரிசோதனை எண்ணிக்கையை மாவட்ட நிர்வாகம் அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News