செய்திகள்
கோப்புபடம்

கடலூரில் கள்ளக்காதலியுடன் தங்கி இருந்த டிரைவர் தற்கொலை

Published On 2020-09-27 07:38 GMT   |   Update On 2020-09-27 07:38 GMT
கடலூரில் கள்ளக்காதலியுடன் தங்கி இருந்த டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:

மதுரை மாவட்டம் கே.புதூர் அருகே உள்ள சம்பாகுளம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் சிவனேஸ்வரன் (வயது 35). டிரைவர். இவருடைய மனைவி சிவமலர். இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சிவனேஸ்வரனுக்கும், அவரது உறவினர் பெண் ஒருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறியது. இதற்கிடையே சிவனேஸ்வரன், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அந்த பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறி கடலூருக்கு வந்தார். கடலூர் சுப்ராயலு நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் இருவரும் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் சிவனேஸ்வரன் நேற்று முன்தினம் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதை தட்டிக்கேட்டதால் அந்த பெண்ணுக்கும், சிவனேஸ்வரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடனே அந்த பெண், வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்று கதவை உள்புறமாக பூட்டிக் கொண்டார். இதனால் மனமுடைந்த சிவனேஸ்வரன், மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்திற்கு பிறகு அந்த பெண், தனது அறையில் இருந்து வெளியே வந்தார். அங்கு அவர் தூக்கில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட சிவனேஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News