செய்திகள்
புதுக்கோட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேலகாயம்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த கருப்பையா (வயது 35) உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல, டவுன் பகுதியில் சூதாடிய காந்தி நகரை சேர்ந்த ரவிச்சந்திரன் (43) உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான 8 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.850 பறிமுதல் செய்யப்பட்டது.