செய்திகள்
கோப்பு படம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரேநாளில் 283 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2020-09-21 12:34 GMT   |   Update On 2020-09-21 12:34 GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 283 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மண்ணிவாக்கம் லோகநாதன் தெருவை சேர்ந்த 25 வயது இளம்பெண், வண்டலூர் சிங்காரத்தோட்டம் பகுதியை சேர்ந்த 59 வயது ஆண், பங்குஜம்மாள் நகரை சேர்ந்த 37 வயது பெண் மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட திருக்குறள் தெருவில் வசிக்கும் 21 வயது வாலிபர், கீழக்கரணை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 34, 31 வயதுடைய வாலிபர்கள், கணபதி நகரை சேர்ந்த 31 வயது இளம்பெண்,

ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட நல்லம்பாக்கம் பகுதியை சேர்ந்த 55 வயது பெண் உள்பட செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 283 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 580 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 29 ஆயிரத்து 607 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 517 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 456 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 207 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 30 ஆயிரத்து 140 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 27 ஆயிரத்து 922 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். ஆயிரத்து 697 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 521 பேர் கொரோனா தொற்றுக்கு இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 5 பேர் இறந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி பகுதியை சேர்ந்த 42, 32, 21, 35 வயதுடைய ஆண்கள் 58, 32, வயது பெண்கள் சாலமங்கலம் பகுதியை சேர்ந்த 37 வயது ஆண், 51 வயது பெண், மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த 63 வயது முதியவர் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 477 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 19 ஆயிரத்து 64 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 294 ஆக உயர்ந்தது. ஆயிரத்து 119 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News