செய்திகள்
கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 3 பேர் கைது

Published On 2020-09-19 10:48 GMT   |   Update On 2020-09-19 10:50 GMT
ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 3 பேரை கைது செய்த போலீசார், தப்பிச்சென்றவர்களை தேடி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பால்நல்லூர் பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது மர்ம நபர்கள் சிலர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் ஓட தொடங்கினர். போலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர்கள் கத்தி, இரும்பு கம்பி, உருட்டுக்கட்டை போன்ற பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதும் தெரிய வந்தது.

மேலும் அவர்கள் பால்நல்லூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த அகஸ்டின் (வயது 28), அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் (23), திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூர் கிராமத்தை சேர்ந்த அன்பரசன் (24) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி, இரும்பு கம்பி, உருட்டுக்கட்டை போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர். தப்பிச்சென்ற திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஆகாஷ், ரஞ்சித் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News