செய்திகள்
குடியாத்தத்தில் லாட்டரி விற்றதாக 2 பேர் கைது
குடியாத்தத்தில் லாட்டரி விற்றதாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், தனிப்பிரிவு ஏட்டு அரிதாஸ் மற்றும் போலீசார் நேற்று குடியாத்தம் தங்கம் நகர் வள்ளலார் தெரு பகுதியில் திடீரென சோதனை செய்தனர். அப்போது லாட்டரி சீட்டுகள் விற்றதாக ராஜேஷ் (வயது 26) என்பவரை கைது செய்தனர்.
அதேபோல் பிச்சனூர் பாலகங்காதர திலகர் தெருவில் லாட்டரி சீட்டுகள் விற்றுக்கொண்டிருந்த ராமமூர்த்தி (54) என்பவரை போலீசார் கைது செய்தனர்.