செய்திகள்
விருதுநகர் மாவட்டத்தில் 41 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2 லட்சத்து 3,759 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 14,677 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது.
3,285 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. 13,138 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். ஒரு சிறப்பு தனிமைப்படுத்தும் மையத்தில் 19 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 230 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. விருதுநகர் லட்சுமிநகரை சேர்ந்த 32 வயது நபர், மூன்று மாத ஆண் குழந்தை, காரியாபட்டியை சேர்ந்த 2 பேர், கான்சாபுரத்தை சேர்ந்த 2 பேர், பெரியவள்ளிக்குளத்தை சேர்ந்த 39 வயது நபர், ஆத்திப்பட்டியை சேர்ந்த 49 வயது நபர், பாலையம்பட்டியை சேர்ந்த 47 வயது நபர், 16 வயது சிறுமி, பெருமாள்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,691 ஆக உயர்ந்துள்ளது. நேற்றுமுன்தினம் 2,383 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்துள்ள நிலையில் 3,285 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.
வெளியாகி உள்ள ஒரு பட்டியலில் எத்தனை பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. மொத்தத்தில் மருத்துவ பரிசோதனை செய்வதிலும், முடிவுகளை வெளியிடுவதிலும் போதிய அக்கறை காட்டாத நிலை தொடர்கிறது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பின் உண்மை நிலவரம் மாவட்ட மக்களுக்கு தெரியமுடியாத நிலை தொடர்கிறது. தடுப்பு நடவடிக்கைகளும் போதிய அளவில் மேற்கொள்ளப்படாத நிலையே உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2 லட்சத்து 3,759 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 14,677 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது.
3,285 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. 13,138 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். ஒரு சிறப்பு தனிமைப்படுத்தும் மையத்தில் 19 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 230 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. விருதுநகர் லட்சுமிநகரை சேர்ந்த 32 வயது நபர், மூன்று மாத ஆண் குழந்தை, காரியாபட்டியை சேர்ந்த 2 பேர், கான்சாபுரத்தை சேர்ந்த 2 பேர், பெரியவள்ளிக்குளத்தை சேர்ந்த 39 வயது நபர், ஆத்திப்பட்டியை சேர்ந்த 49 வயது நபர், பாலையம்பட்டியை சேர்ந்த 47 வயது நபர், 16 வயது சிறுமி, பெருமாள்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,691 ஆக உயர்ந்துள்ளது. நேற்றுமுன்தினம் 2,383 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்துள்ள நிலையில் 3,285 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.
வெளியாகி உள்ள ஒரு பட்டியலில் எத்தனை பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. மொத்தத்தில் மருத்துவ பரிசோதனை செய்வதிலும், முடிவுகளை வெளியிடுவதிலும் போதிய அக்கறை காட்டாத நிலை தொடர்கிறது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பின் உண்மை நிலவரம் மாவட்ட மக்களுக்கு தெரியமுடியாத நிலை தொடர்கிறது. தடுப்பு நடவடிக்கைகளும் போதிய அளவில் மேற்கொள்ளப்படாத நிலையே உள்ளது.