செய்திகள்
கைது

பட்டினப்பாக்கம் அருகே லாரி விபத்தில் குழந்தை பலி- ஓட்டுநர் கைது

Published On 2020-09-11 08:05 GMT   |   Update On 2020-09-11 08:05 GMT
சென்னை பட்டினப்பாக்கத்தில் லாரி மோதிய விபத்தில் 4 வயது குழந்தை உயிரிழந்தது. தப்பி ஓடிய ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:

சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி. சிக்னலில் தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி மோதிய விபத்தில் 4 வயது குழந்தை பலியானது. தண்ணீர் லாரி மோதியதில் சிக்னலில் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனங்களும் சேதமடைந்தன.

இந்த விபத்தில் தாத்தாவுடன் பைக்கில் சென்ற 4 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

குழந்தை இறப்புக்கு காரணமான லாரி ஓட்டுனர் சமீர் தப்பி ஓடிய நிலையில் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News