செய்திகள்
மனைவி தற்கொலை- மருந்து கடைக்காரர் கைது
பொறையாறில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் அவரது கணவரை கைது செய்தனர்.
பொறையாறு:
நாகை மாவட்டம் பொறையாறு நல்ல தண்ணீர் சந்து தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 39). இவர், தரங்கம்பாடியில் மருந்து கடை நடத்தி வருகிறார். அவருடைய மனைவி காயத்ரி (28). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு சரண் (5), கமலேஷ்வரன் (3) என்ற 2 மகன்கள் உள்ளனர். வேல்முருகனுக்கு, வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், அதன் காரணமாக தன்னை வேல்முருகன் அடிக்கடி கொடுமைப்படுத்துவதாகவும் காயத்ரி தனது பெற்றோரிடம் கூறி வந்தார். இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் காயத்ரி கோபித்துக்கொண்டு, திருவாரூர் மாவட்டம் குடவாசலில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு குடவாசலில் உள்ள மாமனார் செல்வராஜின் வீட்டுக்கு சென்ற வேல்முருகன், காயத்ரியை சமாதானம் செய்து பொறையாறில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காயத்ரி தனது வீட்டின் அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயத்ரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயத்ரியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை செல்வராஜ் பொறையாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். காயத்ரிக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் மயிலாடுதுறை உதவி கலெக்டர் மகாராணி, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே பொறையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, காயத்ரியை தற்கொலைக்கு தூண்டியதாக வேல்முருகனை கைது செய்தனர்.
நாகை மாவட்டம் பொறையாறு நல்ல தண்ணீர் சந்து தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 39). இவர், தரங்கம்பாடியில் மருந்து கடை நடத்தி வருகிறார். அவருடைய மனைவி காயத்ரி (28). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு சரண் (5), கமலேஷ்வரன் (3) என்ற 2 மகன்கள் உள்ளனர். வேல்முருகனுக்கு, வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், அதன் காரணமாக தன்னை வேல்முருகன் அடிக்கடி கொடுமைப்படுத்துவதாகவும் காயத்ரி தனது பெற்றோரிடம் கூறி வந்தார். இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் காயத்ரி கோபித்துக்கொண்டு, திருவாரூர் மாவட்டம் குடவாசலில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு குடவாசலில் உள்ள மாமனார் செல்வராஜின் வீட்டுக்கு சென்ற வேல்முருகன், காயத்ரியை சமாதானம் செய்து பொறையாறில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காயத்ரி தனது வீட்டின் அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயத்ரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயத்ரியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை செல்வராஜ் பொறையாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். காயத்ரிக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் மயிலாடுதுறை உதவி கலெக்டர் மகாராணி, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே பொறையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, காயத்ரியை தற்கொலைக்கு தூண்டியதாக வேல்முருகனை கைது செய்தனர்.