செய்திகள்
கைது

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 47 ரவுடிகள் கைது

Published On 2020-09-06 08:30 GMT   |   Update On 2020-09-06 08:30 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த ரவுடிகள் என 47 பேரை கடந்த 7 நாட்களில் கைது செய்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் சாமுண்டீஸ்வரி உத்தரவின்பேரில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொடர் குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த ரவுடிகள் என 47 பேரை கடந்த 7 நாட்களில் கைது செய்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இவர்கள் அனைவரையும் நீதிமன்ற காவல் மற்றும் ஆர்.டி.ஓ. ஆகியோரிடம் ஆஜர்படுத்தி ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து உட்கோட்ட காவல் துணை போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News