செய்திகள்
தற்கொலை

குத்தாலம் அருகே தூக்குப்போட்டு போலீஸ்காரர் தற்கொலை

Published On 2020-09-06 07:45 GMT   |   Update On 2020-09-06 07:45 GMT
குத்தாலம் அருகே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குத்தாலம்:

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவில் போலீஸ் சரகம் ஆத்துக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 45). இவர், நாகை மதுவிலக்கு பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களாக சிவக்குமார் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் பணியை முடித்து விட்டு மயிலாடுதுறை அருகே அகரக்கீரங்குடி கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சிவகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிவக்குமார் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து பெரம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட சிவக்குமாருக்கு துர்கா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
Tags:    

Similar News