செய்திகள்
மயிலாடுதுறை அருகே மாணவியை கடத்திய வாலிபருக்கு வலைவீச்சு
மயிலாடுதுறை அருகே 10ம் வகுப்பு மாணவியை வாலிபர் கடத்தி சென்றது குறித்து பெண்ணின் தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் இருவரையும் தேடி வருகிறார்கள்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலம் ராஜகோபாலபுரம் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி தனது வீட்டில் இருந்து வந்தார். அப்போது இந்த மாணவியை அவரது உறவினரான தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் மகன் சுந்தர்(வயது 20) கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் தந்தை மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் சுந்தர் மீது வழக்குப்பதிவு செய்து அவரையும், சிறுமியையும் தேடி வருகிறார்கள்.