செய்திகள்
கோப்புபடம்

ஆலத்தூர் அருகே 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-09-03 16:32 IST   |   Update On 2020-09-03 16:32:00 IST
ஆலத்தூர் அருகே 9-ம் வகுப்பு மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே கூத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத்குமார். இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 14). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று காலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது, பிரியதர்ஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கிடையில் வெளியில் சென்று இருந்த குடும்பத்தினர் வீட்டுக்கு வந்துபார்த்தபோது, பிணமாக பிரியதர்ஷினி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந் தனர். இது குறித்த தகவல் அறிந்த பாடாலூர்போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக் குப்பதிவு செய்து மாணவியின் தற்கொலை குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண் டது தெரிய வந்தது, தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News