செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுவையில் கொரோனாவுக்கு 12 பேர் பலி

Published On 2020-09-01 18:22 IST   |   Update On 2020-09-01 18:22:00 IST
புதுவை மாநிலத்தில் நேற்று காலை முதல் இன்று காலை வரை ஒரே நாளில் 12 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

புதுச்சேரி:

புதுவையில் நேற்று ஆயிரத்து 323 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 363 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் புதுவையில் 316, காரைக்காலில் 4, ஏனாமில் 43 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுவையில் தற்போது 2 ஆயிரத்து 326, காரைக்காலில் 84, ஏனாமில் 160, மாகியில் 17 பேர் நோய் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் புதுவையில் 264, காரைக்காலில் 36, ஏனாமில் 36 பேர் என மொத்தம் 341 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 14 ஆயிரத்து 766 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 2 ஆயிரத்து 587 பேர் தொற்றுடன் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 9 ஆயிரத்து 675 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

புதுவையில் 2 ஆயிரத்து 38, காரைக்காலில் 107, ஏனாமில் 119 பேர் என 2 ஆயிரத்து 264 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 228 பேர் கொரோனாவுக்கு பலியாகியிருந்தனர். இந்நிலையில் நேற்று காலை முதல் இன்று காலை வரை ஒரே நாளில் 12 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

புதுவையில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 8 ஆண்கள், 2 பெண்கள், ஏனாமில் 2 ஆண்களும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் புதுவையில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 240 ஆக உயர்ந்துள்ளது.

இத்தகவலை புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News