செய்திகள்
பொன்னமராவதி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி
பொன்னமராவதி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னமராவதி:
பொன்னமராவதி அருகே உள்ள இந்திரா நகர் பாண்டிமான் கோவில் வீதியை சேர்ந்தவர் மலையாண்டி (வயது 45). இவர், நேற்று முன்தினம் தனது வீட்டின் மாடியின் தடுப்புச் சுவரில் உட்கார்ந்து இருந்தார். அப்போது அவர் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு பொன்னமராவதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.