செய்திகள்
மரணம்

குளத்தூர் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி

Published On 2020-08-30 17:05 IST   |   Update On 2020-08-30 17:05:00 IST
குளத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே தென்னதி ரயன்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி சின்னப்பொண்ணு (வயது70).

இவரை அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றபோது சின்னப்பொண்ணு மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சின்னப்பொண்ணு மகன் செல்லமுத்து கொடுத்த புகாரின் பேரில் காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News