செய்திகள்
கொள்ளை

கலால் துறையால் சீல் வைக்கப்பட்ட மதுபான கடையில் திருட்டு

Published On 2020-08-29 22:25 IST   |   Update On 2020-08-29 22:25:00 IST
கலால் துறையால் சீல் வைக்கப்பட்ட மதுபான கடையில் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லியனூர்:

ஏம்பலம் அருகே உள்ள மணக்குப்பம் கிராமம் மடுகரை சாலையில் தனியாருக்கு சொந்தமான மதுபான கடை உள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மதுபானங்களை விற்பனை செய்ததாக கலால்துறையினர் இந்த மதுபானக் கடையை மூடி சீல் வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை கலால் துறையினர் கடையின் உரிமையாளர் முன்னிலையில் மதுபான இருப்பை கணக்கெடுப்பு நடத்த சென்றனர். அப்போது கடையில் கலால்துறையினர் வைத்திருந்த சீல் உடைக்கப்பட்டு இருந்தது.

மேலும் கடையில் இருந்த மதுபானங்கள் திருடு போயிருந்தது. இது குறித்து கடையின் உரிமையாளர் மங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News