செய்திகள்
மக்கள் நீதி மய்யம்

கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க அரசும், கவர்னரும் எடுத்த நடவடிக்கை என்ன? மக்கள் நீதி மய்யம் கேள்வி

Published On 2020-08-25 06:16 GMT   |   Update On 2020-08-25 06:16 GMT
கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க அரசும், கவர்னரும் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பி உள்ளது.
புதுச்சேரி:

புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று பரவலுக்கு பொதுமக்கள் அரசின் விதிமுறைகளை பின்பற்றாததே காரணம் என கவர்னர் கிரண்பெடி குற்றஞ்சாட்டி உள்ளார். மக்கள் அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்க அரசும், கவர்னரும் என்ன நடவடிக்கை எடுத்தார்கள். மக்கள் பின்பற்றக்கூடிய சட்ட விதிமுறைகள் தான் வகுக்கப்பட்டதா? அவற்றை முழுமையாக பின்பற்றும் மக்களை அரசு கவுரவிக்கிறதா? அல்லது அதனை பின்பற்றாதவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுகிறார்களா?

கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசே விதிகளை தன் இஷ்டத்திற்கு மாற்றிக்கொள்கிறது. ஆனால் மக்கள் மட்டும் எப்படி அனைத்து விதிகளையும் முழுமையாக கடைப்பிடிக்க முடியும். இக்கட்டான இந்த சூழ்நிலையில் கூட அரசுடன் இணைந்து செயல்பட கவர்னர் முன்வரவில்லை. மக்களை விமர்சனம் செய்வதற்கு முன்பு அதிகாரத்தில் இருப்பவர்கள் அதற்கு தாம் தகுதியானவர்களா? என்பதையும் பார்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News