செய்திகள்
புதுவை முதலமைச்சர், நாராயணசாமி

4-வது முறையாக புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா பரிசோதனை

Published On 2020-08-25 02:27 IST   |   Update On 2020-08-25 02:27:00 IST
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு 4-வது முறையாக கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியின் உதவியாளர் பிரபு. இவருக்கு நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் முதல்-அமைச்சர் நாராயணசாமியுடனே எப்போதும் இருப்பார். எனவே முதல்-அமைச்சர் நாராயணசாமியையும் தொற்று பரிசோதனை மேற்கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அவரது அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் என 20 பேர் நேற்று புதுவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனோ வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொண்டனர்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி ஏற்கனவே 3 முறை தொற்று பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அதாவது தொடக்கத்தில் தொற்று பரவ தொடங்கியபோது சட்டமன்ற வளாகத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது முதல் முறையாக அவர் பரிசோதனை மேற்கொண்டார்.

அதன்பின் முதல்-அமைச்சர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டபோதும், கடந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்.எஸ்.ஜே.ஜெயபாலுக்கு தொற்று ஏற்பட்டபோதும் முதல்-அமைச்சர் நாராயணசாமி பரிசோதனை மேற்கொண்டார். தற்போது 4-வது முறையாக பரிசோதனை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News