செய்திகள்
கே.வி.குப்பம் பகுதியில் 2 கடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு
கே.வி.குப்பம் பகுதியில் 2 கடைகளின் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கே.வி.குப்பம்:
கே.வி.குப்பத்தில் நேற்று போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வடுகந்தாங்கல் பகுதியில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த எலக்ட்ரீசியன் கடை, மேல்மாயில் ரோடு பகுதியில் மளிகைக்கடை ஆகியவற்றின் உரிமையாளர்கள் மீது கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.