செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 161 பேர் கைது
வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 161 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டனர்.
வேலூர்:
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பொதுஇடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூட்டமாக நிற்க கூடாது. அத்தியாவசிய தேவையின்றி சாலைகளில் சுற்றி திரியக்கூடாது. பொதுஇடங்களில் முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஊரடங்கை மீறி சுற்றித்திரியும் நபர்கள் மீது வழக்குப்பதிந்து கைது நடவடிக்கை மேற்கொள்கிறார்கள்.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஊரடங்கை மீறிய 161 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும் மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட 18 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அரசின் விதியை மீறி திறந்த 61 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.