செய்திகள்
மின்சார நிறுத்தம்

ஈரோட்டில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

Published On 2020-07-26 13:19 GMT   |   Update On 2020-07-26 13:19 GMT
ஈரோட்டில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம் செய்யபடுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
ஈரோடு:

சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் அக்ரஹாரம் மின் பாதையில், நெடுஞ்சாலையில் மின் கம்பங்கள் இடமாற்றம் செய்யும் பணி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அதனால் ஈரோடு சத்தி ரோடு, அக்ரஹாரம் இணைப்பு சாலை, பி.கே.டி.நகர், ராஜீவ்நகர், பிச்சாங்காடு, நந்தவன தோட்டம், ஞானபுரம், பச்சப்பாளி மேடு, பச்சாயி தோட்டம், கே.ஆர்.குளம், அருள் வேலவன் நகர், சூளை, கந்தையன் தோட்டம், வி.ஜி.பி. நகர் ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை ஈரோடு மின் பகிர்மான வட்ட நகரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News