செய்திகள்
எம்.எல்.ஏ. ஜெயபாலுக்கு கொரோனா - சபாநாயகர், அமைச்சர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள உத்தரவு
புதுச்சேரி எம்.எல்.ஏ. ஜெயபாலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து சபாநாயகர், அமைச்சர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதை அடுத்து காலவரையின்றி சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாக புதுச்சேரி சபாநாயகர் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் நாராயணசாமி சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்களை 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.