செய்திகள்
நோய் எதிர்ப்பு சக்தி மருந்து வினியோகம்

மொடக்குறிச்சி ஒன்றிய பகுதியில் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து வினியோகம்

Published On 2020-07-25 15:31 IST   |   Update On 2020-07-25 15:31:00 IST
மொடக்குறிச்சி ஆகிய 4 பேரூராட்சிக்கு உள்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் ஓமியோபதி மருந்தான ஆர்சனிகம் ஆல்பம் 30 சி என்ற நோய் எதிர்ப்பு சக்தி மருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மொடக்குறிச்சி:

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 23 ஊராட்சிகள் மற்றும் அவல்பூந்துறை, அறச்சலூர், வடுகபட்டி, மொடக்குறிச்சி ஆகிய 4 பேரூராட்சிக்கு உள்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் ஓமியோபதி மருந்தான ஆர்சனிகம் ஆல்பம் 30 சி என்ற நோய் எதிர்ப்பு சக்தி மருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி வி.பி.சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நோய் எதிர்ப்பு சக்தி மருந்தை அந்தந்த ஊராட்சி தலைவர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அதிகாரிகளிடம் வழங்கினார். இதையொட்டி ஒரு குடும்பத்துக்கு தேவையான முககவசங்கள் மற்றும் கிருமி நாசினி ஆகியவையும் வழங்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News