செய்திகள்
ஈரோட்டுக்கு 1000 டன் நெல் ரெயிலில் வந்தது

திருவாரூரில் இருந்து ஈரோட்டுக்கு 1,000 டன் நெல் ரெயிலில் வந்தது

Published On 2020-07-22 16:01 IST   |   Update On 2020-07-22 16:01:00 IST
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல், ஈரோடு மாவட்ட பொதுவினியோக திட்டத்திற்காக கொண்டு வரப்படுகிறது. இதில் 1,000 டன் நெல் மூட்டைகள் 21 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயிலில் ஈரோட்டிற்கு வந்தது.
ஈரோடு:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் பொது வினியோக திட்டத்திற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல், ஈரோடு மாவட்ட பொதுவினியோக திட்டத்திற்காக கொண்டு வரப்படுகிறது. இதில் 1,000 டன் நெல் மூட்டைகள் 21 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயிலில் ஈரோட்டிற்கு வந்தது. இந்த ரெயிலில் உள்ள நெல் மூட்டைகள் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலமாக நேற்று நூற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றப்பட்டு சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. அரிசி ஆலைகளுக்கு நெல் அனுப்பி வைக்கப்பட்டு அரிசியாக மாற்றி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News