செய்திகள்
முழு முடக்கம்

குடியாத்தம், புதுக்கோட்டை பகுதியில் 8 நாட்களுக்கு முழு முடக்கம் அறிவிப்பு

Published On 2020-07-21 11:42 GMT   |   Update On 2020-07-21 11:42 GMT
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் குடியாத்தம், புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் 8 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை தடுக்க சில உத்தரவுகளையும், அறிவிப்புகளையும் பிறப்பித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமிருக்கும் சில பகுதிகளில் ஆங்காங்கே மாவட்ட நிர்வாகங்கள் ஊரடங்கு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் குடியாத்தம், புதுக்கோட்டை நகராட்சி ஆகிய பகுதிகளில் 8 நாட்களுக்கு முழு பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

குடியாத்தம் நகராட்சியில் ஜுலை 24 முதல் 31 ஆம் தேதி வரை 8 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

குடியாத்தம் நகராட்சியில் காய்கறிக் கடை, இறைச்சி கடைகள், மீன் கடைகள் உள்ளிட்டவை காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் ஜுலை 24 முதல் 31 ஆம் தேதி வரை தளர்வில்லா முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது-  வர்த்தகர்களுடன் வருவாய் கோட்டாட்சியர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு முடக்கம் அமலில் இருந்தாலும் மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள் 24 மணி நேரமும் வழக்கம்போல செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

Similar News