செய்திகள்
வேலூர் தொகுதி திமுக எம்எல்ஏ-வுக்கு கொரோனா
வேலூர் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே 14 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 15-வதாக வேலூர் தொகுதி திமுக எம்எல்ஏ-வுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக இன்று காலை கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்எல்ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே 14 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 15-வதாக வேலூர் தொகுதி திமுக எம்எல்ஏ-வுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக இன்று காலை கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்எல்ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.