செய்திகள்
பவானி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
பவானி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பவானி:
பவானியை அடுத்து உள்ள ஊராட்சிக்கோட்டை புதுமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சபரிமுத்து. இவருடைய மகன் கிறிஸ்டோபர் (வயது 20). இவர் அங்கு உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மது பழக்கம் இருப்பதாக தெரிகிறது. இதனால் அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வருவார்.
இந்தநிலையில் நேற்று வழக்கம்போல் மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது சபரிமுத்து, கிறிஸ்டோபரிடம் மது பழக்கத்தை கை விடுமாறு கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையை தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் வெறுத்த கிறிஸ்டோபர் தற்கொலை செய்ய முடிவெடுத்து, மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டார். மேலும் தான் விஷம் குடித்து விட்டதாக நண்பர்களிடம் கூறியுள்ளார். உடனே அவர்கள் கிறிஸ்டோபரை மீட்டு, பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்கள். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இது குறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பவானியை அடுத்து உள்ள ஊராட்சிக்கோட்டை புதுமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சபரிமுத்து. இவருடைய மகன் கிறிஸ்டோபர் (வயது 20). இவர் அங்கு உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மது பழக்கம் இருப்பதாக தெரிகிறது. இதனால் அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வருவார்.
இந்தநிலையில் நேற்று வழக்கம்போல் மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது சபரிமுத்து, கிறிஸ்டோபரிடம் மது பழக்கத்தை கை விடுமாறு கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையை தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் வெறுத்த கிறிஸ்டோபர் தற்கொலை செய்ய முடிவெடுத்து, மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டார். மேலும் தான் விஷம் குடித்து விட்டதாக நண்பர்களிடம் கூறியுள்ளார். உடனே அவர்கள் கிறிஸ்டோபரை மீட்டு, பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்கள். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இது குறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.