செய்திகள்
சிவகங்கை அருகே 2 பிள்ளைகளை கொன்று தாய் தற்கொலை
சிவகங்கை அருகே குறிஞ்சி நகரில் வசித்து வந்த தாய் தனது மகள் மற்றும் மகளுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்டார்.
சிவகங்கை:
சிவகங்கை அருகே குறிஞ்சி நகரில் வசித்து வருபவர் காளிஸ்வரி. இவருக்கு மகன் அபிஷேக் (9), மகள் மங்கையர் திலகம் (14) என்ற குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் வீட்டில் வசித்து வந்த காளிஸ்வரி தனது பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்டார். தகவல்அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அதில் தாய் காளிஸ்வரி, தனது மகன் அபிஷேக் (9), மகள் மங்கையர் திலகம் (14), ஆகியோரை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் கொலைக்கான காரணமாக தான் வசித்து வந்த வீட்டிற்கான காலக்கெடு முடிந்த நிலையில் பணத்தை வீட்டின் உரிமையாளர் தர மறுத்ததால் தாய் இந்த விபரிதச் செயலில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்த்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை அருகே குறிஞ்சி நகரில் வசித்து வருபவர் காளிஸ்வரி. இவருக்கு மகன் அபிஷேக் (9), மகள் மங்கையர் திலகம் (14) என்ற குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் வீட்டில் வசித்து வந்த காளிஸ்வரி தனது பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்டார். தகவல்அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அதில் தாய் காளிஸ்வரி, தனது மகன் அபிஷேக் (9), மகள் மங்கையர் திலகம் (14), ஆகியோரை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் கொலைக்கான காரணமாக தான் வசித்து வந்த வீட்டிற்கான காலக்கெடு முடிந்த நிலையில் பணத்தை வீட்டின் உரிமையாளர் தர மறுத்ததால் தாய் இந்த விபரிதச் செயலில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்த்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.