செய்திகள்
புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண்

புதுவையில் மேலும் 13 கட்டுப்பாட்டு மண்டலம்

Published On 2020-07-16 12:44 IST   |   Update On 2020-07-16 12:44:00 IST
புதுவையில் மேலும் 13 இடங்களை கட்டுப்பாட்டு மண்டலமாக மாவட்ட கலெக்டர் அருண் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-

புதுவையில் கொரோனா பாதித்த நபர்கள் வசித்து வந்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி 1.சாரம் சக்திநகர் 3-வது குறுக்குத்தெரு, 2.நைனார்மண்டபம் துலுக்கானத்தமன் நகர் 4-வது குறுக்குத்தெரு, 3.முருங்கப்பாக்கம் ஜெயமூர்த்தி ராஜா நகர் பாரதியார் சாலை 3-வது குறுக்குத்தெரு, 4.வாணரபேட்டை தாவீதுபேட்டை கல்லறை வீதி, 5.முருங்கப்பாக்கம்- கடலூர் சாலை நைனார்மண்டபம் குயவர் வீதி, 6. சுதானா நகர் வசந்தம் வீதி, 7.தேங்காய்திட்டு பள்ளித்தெரு, 8.கொம்பாக்கம் பாலாஜி நகர் விநாயகர் கோவில் தெரு, 9.உருளையன்பேட்டை அய்யனார் நகர் முதல் குறுக்குத்தெரு, 10.உருளையன்பேட்டை இளங்கோ நகர் 3-வது குறுக்குத்தெரு,

11.சாரம் சக்தி நகர் 9-வது குறுக்குத்தெரு, 12.புதுப்பாளையம் நெல்லித்தோப்பு கண்ணார வீதி, 13.உருளையன்பேட்டை முத்தமிழ் நகர் புளியமரத்து வீதி ஆகிய பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. அந்த பகுதியில் பொது போக்குவரத்து, பொது மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News