செய்திகள்
புதுவை முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வர மத்திய அரசு அனுமதி தர வேண்டும்- முதலமைச்சர் நாராயணசாமி

Published On 2020-07-15 11:30 GMT   |   Update On 2020-07-15 11:30 GMT
புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வர அனுமதி தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதி உள்ளார்.
புதுச்சேரி:

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக புதுவையிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா நகரான புதுச்சேரியில் பெரிய அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வர அனுமதி தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர்  நாராயணசாமி கடிதம் எழுதி உள்ளார்.
 
அந்த கடிதத்தில் ஆக.1ந்தேதி முதல் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வர மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா பயணிகள் வர அனுமதி தரக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக புதுச்சேரி முதல்வர்  நாராயணசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News