செய்திகள்
கைது

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

Published On 2020-07-15 09:18 GMT   |   Update On 2020-07-15 09:18 GMT
கடலூர் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:

கடலூர் வண்டிப்பாளையம் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் பின்புறம் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடலூர் முதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பணம் வைத்து சூதாடிய 5 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்த அசோக் (வயது 27), சங்கர்(32), கலியமூர்த்தி மகன் சரவணன்(42), நத்தவெளி ரோடு துரைராஜ்(29), புருகீஸ்பேட்டை சரவணன்(37) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர்.
Tags:    

Similar News