செய்திகள்
கடலூரில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கடலூர் நகர பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் கடலூரில் நடைபெற்றது.
கடலூர்:
கடலூர் நகர பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் கடலூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் கோவிலானூர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் கே.பி.டி. இளஞ்செழியன், மாவட்ட தலைவர் விநாயகம், கிழக்கு மாவட்ட பார்வையாளர்கள் சரவணன், சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக இந்திய உணவு கழக இயக்குனரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான டாக்டர் எஸ்.பி. சரவணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் நகர, ஒன்றியங்களில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து பொதுமக்களிடையே கட்சியினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். கொரோனா ஊரடங்கு காலத்தில் மத்திய அரசு மக்களுக்கு செய்த விரிவான தடுப்பு நடவடிக்கை குறித்து விளக்கி கூற வேண்டும். 2021-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் தாமரையை மலர செய்ய பாடுபடுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கடலூர் தெற்கு ஒன்றிய தலைவர் பில்லாலி ரமேஷ், வடக்கு ஒன்றிய தலைவர் அருள், குறிஞ்சிப்பாடி ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன், பா.ஜ.க. நிர்வாகிகள் பந்தல் பரசுராமன், மணிஇந்திரஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கடலூர் நகர தலைவர் வேலு வெங்கடேசன் செய்திருந்தார். முடிவில் நகர ஊடகப்பிரிவு இளையராஜா நன்றி கூறினார்.
கடலூர் நகர பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் கடலூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் கோவிலானூர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் கே.பி.டி. இளஞ்செழியன், மாவட்ட தலைவர் விநாயகம், கிழக்கு மாவட்ட பார்வையாளர்கள் சரவணன், சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக இந்திய உணவு கழக இயக்குனரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான டாக்டர் எஸ்.பி. சரவணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் நகர, ஒன்றியங்களில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து பொதுமக்களிடையே கட்சியினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். கொரோனா ஊரடங்கு காலத்தில் மத்திய அரசு மக்களுக்கு செய்த விரிவான தடுப்பு நடவடிக்கை குறித்து விளக்கி கூற வேண்டும். 2021-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் தாமரையை மலர செய்ய பாடுபடுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கடலூர் தெற்கு ஒன்றிய தலைவர் பில்லாலி ரமேஷ், வடக்கு ஒன்றிய தலைவர் அருள், குறிஞ்சிப்பாடி ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன், பா.ஜ.க. நிர்வாகிகள் பந்தல் பரசுராமன், மணிஇந்திரஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கடலூர் நகர தலைவர் வேலு வெங்கடேசன் செய்திருந்தார். முடிவில் நகர ஊடகப்பிரிவு இளையராஜா நன்றி கூறினார்.