செய்திகள்
கொலை

வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் குத்திக்கொலை

Published On 2020-07-09 03:22 GMT   |   Update On 2020-07-09 03:22 GMT
குன்றத்தூர் பகுதியில் வாடகை கேட்டதால் வீட்டு உரிமையாளர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குன்றத்தூர்:

குன்றத்தூர் பகுதியில் குணசேகர் என்பவருக்கு சொந்தமான வீட்டில் அஜித் என்ற வாலிபர் வாடகைக்கு குடியிருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 4 மாதங்களாக வாடகை கொடுக்காததால், வீட்டின் உரிமையாளர் குணசேகர், அஜித் என்ற வாலிபரிடம் வாடகை கேட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வாலிபர் அஜித், வீட்டின் உரிமையாளர் குணசேகரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

இதையடுத்து, வாலிபர் அஜித்தை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
Tags:    

Similar News